Showing posts with label இரவும். Show all posts
Showing posts with label இரவும். Show all posts

ஒருவனையும் அற்பமாய் எண்ணாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்

“இந்தச் சிறியரில் ஒருவனையும் அற்பமாய் எண்ணாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; அவர்களுக்குரிய தேவதூதர்கள் பரலோகத்திலே என் பரமபிதாவின் சமுகத்தை எப்போதும் தரிசிக்கிறார்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்” (மத். 18:10) 
...கர்த்தர், மனிதனை இந்த பூமியிலே சிருஷ்டிப்பதற்கு முன்பாக, கர்த்தர் தேவ தூதர்களை சிருஷ்டித்தார். அவர்களுடைய எண்ணிக்கை ஆயிரமாயிரமாயிருந்தது. அவர்கள் நம்மைப்போல மண்ணிலிருந்து உருவாக்கப்பட்டவர்களல்ல. தேவனுடைய ஜோதிப் பிரகாசத்திலிருந்து, அதாவது அழியாத மகிமையுள்ளவர்களாக, சிருஷ்டிக்கப் பட்டார்கள். ஆனால் தேவன், தேவதூதர்களுக்கு வந்த பெருமை மனிதனுக்குள்ளும் வந்துவிடாதபடி, தள்ளப்பட்டு போய்விடக்கூடாது என்பதற்காக, முன்னெச்சரிக்கை யாக மனுஷனை மண்ணிலிருந்து, உண்டாக்கினார்.
சங்கீதக்காரன் சொல்லுகிறார், “நீர் அவனைத் தேவதூதரிலும் சற்று சிறியவனாக்கினீர்; மகிமையினாலும், கனத்தினாலும், அவனை முடிசூட்டினீர். உம்முடைய கரத்தின் கிரியைகளின்மேல் நீர் அவனுக்கு ஆளுகை தந்து, சகலத்தையும் அவனுடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தினீர்” (சங். 8:5,6).
மட்டுமல்ல, யார் யார் இரட்சிக்கப்பட்டு தேவனுடைய பிள்ளைகளாக மாறுகிறார் களோ, அவர்களுக்கு தேவதூதர்களையெல்லாம் பணிவிடை ஆவிகளாகத் (வேலைக்காரர்களாக) தந்தருளுகிறார் (எபி. 1:14). அதன்படி நம்மை தேவ தூதர்களுக்கு மேலாக உயர்த்திவிட்டார். தேவதூதர்கள், நமக்குக் கொடுக்கப்படுகிற பணிவிடை ஆவிகள். மறுபடியும் பிறந்தவர்கள் ஏழைகளாயிருந்தாலும், படிப்பறிவில்லாதவர்களாயிருந்தாலும், அவர்களை யாரும் அற்பமாய் எண்ணிவிட முடியாது. ஏனென்றால், அப்படிப்பட்ட ஒவ்வொருவருக்காகவும், கர்த்தர் தேவ தூதர்களை நியமித்திருக்கிறார். அவர்கள் பரலோகத்திலே தேவனை தரிசித்து, அவர்களுக்காக, உத்தரவாதம் செய்கிறார்கள்.
ஒரு ஐசுவரியவான் வீட்டு வாசலருகே, லாசரு என்ற மனிதன், நாய்க்குக் கிடைக்கக்கூடிய உணவு கூட கிடைக்காமல், தவித்தான். ஆனாலும் அவன் மரித்தபோது, தேவதூதர்களால் ஆபிரகாமின் மடிக்கு அழைத்துச் செல்லப்பட்டான். ஆனால் ஐசுவரியவானோ, பாவியாயிருந்தபடியால், அவனுக்கு ஆபிரகாமின் மடியும் கிடைக்கவில்லை. தேவதூதரின் பணியும் கிடைக்கவில்லை. இதனால் வேதம் சொல்லுகிறது, “அந்நியரை உபசரிக்க மறவாதிருங்கள்; அதினாலே சிலர் அறியாமல் தேவதூதரையும் உபசரித்ததுண்டு” (எபி. 13:2).
இரட்சிக்கப்படுகிற ஒவ்வொரு தேவபிள்ளைக்கும், ஒரு தேவதூதன் உண்டு. உங்கள் ஊழியத்துக்கு ஏற்ற விதத்திலே, நூற்றுக்கு அதிபதியைப்போல, நூறு தேவ தூதர்களையோ, அல்லது ஆயிரம் தேவதூதர்களையோ, கர்த்தர் தருவதுண்டு. தேவபிள்ளைகளை பாதுகாக்கிற சாதாரண ஊழியம் செய்கிற தேவதூதர்கள், எப்பொழுதும் பிதாவின் முகத்தை பரலோகத்தில் தரிசிப்பதை கண்டிருப்பீர்கள். ஆனால், உன்னதமான ஆவிக்குரிய ஜீவியம் செய்கிறதான, தேவபிள்ளைகள், எவ்வளவு சமீபமாக பிதாவினுடைய முகத்தை தரிசிப்பார்கள்!
இந்த உலகத்தில் நீங்கள், எவ்வளவுக்கெவ்வளவு அதிகமாக தேவனாகிய கர்த்தரை நெருங்கி ஜீவிக்கிறீர்களோ, அதைப் போலவே, பரலோகத்திலும் அவருடைய முகத்தை மிக அருகிலே தரிசிப்பீர்கள். ஆகவே, தேவனுடைய இருதயத்துக்கு, மிகவும் நெருங்கி ஜீவிக்க பிரயாசப்படுங்கள்.
http://appamonline.com/2016/11/24/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%95-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/
Share: 

வாழ்க்கை பயணம்தில் நாம் கற்று கொள்ளவேண்டியது என்ன ?

வாழ்க்கை என்பது ஒரு பயணம். அதில் நம்மை ஆயத்தபடுத்த வேண்டிய காரியங்கள்  என்ன ? 

நாய்களுக்கு கொடுக்கும் உணவை உண்டு அனாதையாக வளர்ந்தவர்

நாய்களுக்கு கொடுக்கும் உணவை  உண்டு  அனாதையாக வளர்ந்தவர் ஒரு விபசாரியின் மகன் துன்பமே வாழ்க்கையாக வாழ்ந்தவர் இன்று  எப்படி தேவனால் மீட்கபட்டவர்? எப்படி வல்லமையால் பயன்படுத்தபடுகிறார் ?

எங்கள் இருவருக்கும் இடையில் மத்தியஸ்தன் இல்லையே.!

ஆதாம் தொடக்கம் இயேசு வரை உள்ள காலம் பழைய ஏற்பாடு காலம் என அழைக்கபடுகின்றது .இக் காலங்களில்  மனிதனின் கீழ்படியாமையினாலும் அறியாமையினாலும் செய்த தவறினால்  இழந்த பல அரிய கொடைகள் அரிய ஆசீர்வாதங்களை எந்த வித கவலையும் ,எந்த வித வியாதியும் இன்றி எந்த நேரமும்  சந்தோசமாக வாழும் வாழ்கையை  மீண்டும் பெற்று கொடுக்க
பல வழிகளில் பல மனிதர்களுடன் இணைந்து சக்கிலி தொடராக மீட்பு திட்டத்தை நிறைவேற்றி வருகிறார் இறைவன்  .மனிதர்கள் பல வழிகளில் தவறிழைத்து  துரோகம் செய்தபோதும் தகப்பனுக்குரிய மனநிலையுடன் மன்னித்து மீண்டும்   தூக்கி விட்டு மீட்பு திட்டத்தை இன்றுவரை தொடர்ந்து வருகிறார்.இயேசு மனித அவதாரம் எடுத்து பாவத்தில் இருந்து மீட்டு  எம்மை இரசித்து பரிசுத்தவானாக மாற்றி உள்ளார். அத்துடன்  எம்மை பற்றி இரவும் பகலும் தேவனுக்கு முன்பாக நின்று சாத்தான் குற்றம் சுமத்தி வருகிறான் .காண்க    
வெளிப்படுத்துதல்  12 
9. உலகமனைத்தையும் மோசம்போக்குகிற பிசாசு என்றும் சாத்தான் என்றும் சொல்லப்பட்ட பழைய பாம்பாகிய பெரிய வலுசர்ப்பம் தள்ளப்பட்டது; அது பூமியிலே விழத்தள்ளப்பட்டது, அதனோடேகூட அதைச்சேர்ந்த தூதரும் தள்ளப்பட்டார்கள்.

10. அப்பொழுது வானத்திலே ஒரு பெரிய சத்தமுண்டாகி: இப்பொழுது இரட்சிப்பும் வல்லமையும் நமது தேவனுடைய ராஜ்யமும், அவருடைய கிறிஸ்துவின் அதிகாரமும் உண்டாயிருக்கிறது; இரவும் பகலும் நம்முடைய தேவனுக்குமுன்பாக நம்முடைய சகோதரர்மேல் குற்றஞ் சுமத்தும்பொருட்டு அவர்கள் மேல் குற்றஞ்சாட்டுகிறவன் தாழத் தள்ளப்பட்டுப்போனான்.
இதனை யோபுவின் வாழ்கையில் காணலாம் .இந்த இடத்தில் யோபுவை பற்றி தேவன் தாமே நன்மையானதை சான்று பகர்கிறார் .ஆனால் தேவனுக்கு முன்பாக நின்று யோபுசார்பாக பேச ஒருவரும் இல்லை

     யோபு1 அதிகாரம் 
    8. கர்த்தர் சாத்தானை நோக்கி: என் தாசனாகிய யோபின்மேல் கவனம் வைத்தாயோ? உத்தமனும் சன்மார்க்கனும், தேவனுக்குப் பயந்து, பொல்லாப்புக்கு விலகுகிறவனுமாகிய அவனைப்போல பூமியில் ஒருவனும் இல்லை என்றார்.
 யோபு 9 அதிகாரம்
    19. பெலத்தைப் பார்த்தால், அவரே பெலத்தவர்; நியாயத்தைப்  பார்த்தால், என் பட்சத்தில் சாட்சி        சொல்லுகிறவன் யார்?
32. நான் அவருக்குப் பிரதியுத்தரம் சொல்லுகிறதற்கும், நாங்கள் கூடி நியாயத்திற்கு வருகிறதற்கும், அவர் என்னைப்போல மனுஷன் அல்லவே.
33. எங்கள் இருவர்மேலும் தன் கையை வைக்கத்தக்க மத்தியஸ்தன் எங்களுக்குள் இல்லையே.
மத்தியஸ்தன்  என்ற இந்த இடம் பழைய ஏற்பாட்டு காலத்தில் எபோதும் வெற்றிடமாக இருந்தது .நமது தேவனுக்கும் எனது பிள்ளைகளை சார்பாக இரவும் பகலும் பரிந்துரைக்கவும் அவர்களை பற்றி நன்மையானவைகளை பேச மத்தியஸ்தன் யாரும் இல்லை என்று பரிதவித்தார் ,ஏங்கினார் .இந்த ஏக்கத்தை சரி செய்ய இந்த வெற்றித்தை நிரப்ப நமது தேவன் சித்தம் கொண்டார் . எனவே பரலோகத்தின் தேவன் இயேசு என்னும் நாமத்தில் மனித அவதாரம் எடுத்து பரலோக மகிமையைவிட்டு இறங்கி வந்து சகல விதத்திலும் மனிதரைப் போல் ஆகி உனக்காக மாகா வியாகுலப்பட்டு, சிலுவையில் இரத்தம் சிந்தி மரித்து சகல பாவத்துக்கும் பரிகாரம் செய்து தூய தந்தையின் வலதுபுறம் அமர்ந்து இரவும் பகலும் எங்களுக்காக பரிந்து பேசி கொண்டும் எங்களை பாதுகாத்து நாம் பரலோகத்தில் நித்தியம் நிதியமாக அவருடனே வாழ எங்களை தினம் தினம் ஆயுதத்படுத்தி  வருகிறார் .அன்று  யோபுவிற்கு கிடைக்காத இந்த பாக்கியம் எங்களிற்கு கிடைத்துள்ளது எனவே இந்த பாக்கியதை நாம் பெற்றுகொள்ள இயேசு சொந்த இரட்சகராக ஏற்றுகொண்டு  அவரது செட்டைகளின் கீழ் அடைக்கலமாக பாதுகாப்பாக சந்தோசமாக வாழ்வாம் .சகல துதிகன மிகிமை என் அருமை அப்பா இயேசுவுக்கே

நீ என் மகன் நான் உனது தகப்பன்


இந்தியாவுக்காக நான் எழும்ப வேண்டுமே


இந்தியாவுக்காக  நான் எழும்ப  வேண்டுமே
இரவும் பகலுமாய் நான் புலம்ப  வேண்டுமே