Showing posts with label kaathal. Show all posts
Showing posts with label kaathal. Show all posts

நான் உங்கள் பேரில் நினைத்திருக்கிற நினைவுகளை அறிவேன்

நான் உங்கள் பேரில் நினைத்திருக்கிற நினைவுகளை அறிவேன் 

இந்தியாவிற்கு வரும் ஆபத்துகள் என்ன?

இந்தியாவுக்கு செபிப்போம் வாருங்கள் இந்தியாவிற்கு வரும் ஆபத்துகள் என்ன தேசத்துக்காக செபிப்பது எப்படி ?

கடைசிகாலத்தில் வாழும் தீர்கதரிசிகளின் பணி என்ன ?

கடைசிகாலத்தில் வாழும்  தீர்கதரிசிகளின் பணி என்ன ? வகைகள் என்ன

கடைசிகாலத்தில் வாழும் தீர்கதரிசிகளின் பணி என்ன ?

கடைசிகாலத்தில் வாழும்  தீர்கதரிசிகளின் பணி என்ன ? வகைகள் என்ன 

நான் நட்ட கிளை நீ

நான் நட்ட கிளை நீ நான் உன்னை போசிப்பேன்  பாதுகாப்பேன் தப்புவிப்பேன். உனக்காக யாவற்றையும் செய்து முடிக்கும் தேவன் நானே  

என் உயிருக்கு உயிரான அன்பை நான் தேடுகிறேன்

என் உயிருக்கு உயிரான அன்பை நான் தேடுகிறேன் 
என் உயிருக்கு உயிரான அன்பை நான் தேடுகிறேன் 
அன்பே அன்பே எங்குள்ளதோ 
அங்கே அங்கே நான் இருப்பன் 
ஒளியின் இதயத்தை தேடுகிறேன் 
அன்பு உள்ளத்தை தேடுகிறேன் 
எங்கும் எங்கும் உள்ளவரே 
அன்பை அன்பை கொடுப்பவரை 
தேடினேன் தேடியும் கண்டுகொண்டேன் 
என் அருமை ஜேசு ராஜாவை 
காலங்கள் மாறலாம் நேரங்கள் மாறலாம் 
குணங்கள் மாறலாம் வழிகள் மாறலாம் 
நன்றி http://aseervatha.blogspot.com/
எப்போதும் மாறாத ஒருவர் இயேசு ஒருவரே

என் உள்ளங்கையில் உனது பெயரை எழுதி வைத்திருக்கிறேன்

என் அன்பு மகனே  ஏன்  கலங்குகிறாய் உன்னை நான் உன் தாயின் கருவில் இருக்கும் போதே பெயர் சொல்லி அழைத்தேன். ஏன்  என் உள்ளங்கையில் உனது பெயரை எழுதி வைத்திருக்கிறேன். உனக்காகவே எனது அத்தனை மகிமையையும் துறந்து வானில் இருத்து இறங்கி  வந்தேன் . உன் பரம்பரை பரம்பரையாக  மற்றும் உங்களில்  பிறக்கவிருக்கும் மனிதர்கள் அனைவரது பாவங்களையும் ஒரு மனிதனுக்குரிய பலவீனத்தோட சுமந்து தீர்த்தேன். அதனால் உனக்கு ஏற்படும் சகல வாதைக்கும் நான் பூமியில் இருக்கும் போது  எனக்கும் ஏற்பட்டவையே அவ்வாதைகள் உனக்கும் ஏற்பட்டதைவிட பலமடங்காக எனக்கு ஏற்பட்டது என் மகனே  , எனவே உனது துன்பங்களை நான் அறிவேன் . நான் உனக்காக பரிதவிக்கிறேன் . நீ என்னை ஏற்றுக் கொள் மறுதலித்து தூசிக்கும் போதும்  நான் உன்னை அன்பு செய்கிறேன். நான் பரலோக மகிமையில் இருந்து கொண்டும் வெறுமனே உன்னை அன்பு செய்கிறேன் என்று வாயின் வார்த்தையாய் சொல்லாமல், பரலோக மகிமையைவிட்டு இறங்கி வந்து சகல விதத்திலும் மனிதரைப் போல் ஆகி உனக்காக மாகா வியாகுலப்பட்டு, சிலுவையில் இரத்தம் சிந்தி மரித்து சகலத்தையும் ஆயத்தம் பண்ணிவிட்டே உம்மை அன்பு செய்கிறேன். என் அன்பை புரிந்து கொள்  மகனே! உன் பாவங்கள் எவ்வளவு பெரியதாய் இருந்தாலும்   அதை நான் பார்ப்பதில்லை. காரணம் நீ என் மகன்  நான் உனது தகப்பன்  எனவே தான் நான் உனக்காக அனைத்து  பாவ பரிகாரம் செய்தேன் .உனக்காக என் உயிரையும் கொடுத்தேன் . நீ என்அன்பை புரிந்து, என் இரக்கத்தை புரிந்து கொள்ள வேண்டும் என்பதையே நான் உனக்காக  ஏங்கி காத்திக்கிறேன். நான் உனக்காக அழுகிறேன். நான் உனக்காக பரிதவிக்கிறேன். மனம் மாறு மகனே என் அன்பை புரிந்து கொள் பாவத்தை  அறிக்கையிடு, என்னையன்றி உலக்கத்திலே யாரும் பாவத்தில்    இருந்து விடுதலை அளிக்க முடியாது.  வேத புத்தகத்தை வாசி என் மகனே! அதை வாசிக்க வாசிக்க என் ஆவி உன் மேல் தங்கும்.  நான் நியாயம்   தீர்க்க வரும் முன் நீ மனம்மாறி என் தண்டனைக்கு நீ தப்ப வேண்டும். என நான் விரும்புகின்றேன்.  எனவே விரைவாக பாவங்களை அறிக்கையிட்டு மனமாறு மனமாறு காலம் சமீபம் இனி காலம் செல்லாது .

ஜேசு சாமி என்ற ஒருவர் இருக்கிறார்

    உயிருக்கு உயிரான அன்பை நான் தேடுகிறேன்

    உயிருக்கு உயிரான அன்பை நான் தேடுகிறேன்
    என் உயிருக்கு உயிரான அன்பை நான் தேடுகிறேன் 
    அன்பே அன்பே எங்குள்ளதோ 
    அங்கே அங்கே நான் இருப்பன் 
    ஒளியின் இதயத்தை தேடுகிறேன் 
    அன்பு உள்ளத்தை தேடுகிறேன் 
    எங்கும் எங்கும் உள்ளவரே 
    அன்பை அன்பை கொடுப்பவரை 
    தேடினேன் தேடியும் கண்டுகொண்டேன் 
    என் அருமை ஜேசு ராஜாவை 
    காலங்கள் மாறலாம் நேரங்கள் மாறலாம் 
    குணங்கள் மாறலாம் வழிகள் மாறலாம் 
    நன்றி http://aseervatha.blogspot.com/
    எப்போதும் மாறாத ஒருவர் இயேசு ஒருவரே

    சொந்தம் என்று சொல்லி கொள்ள உம்மைவிட யாரும் இல்லை

    சொந்தம் என்று சொல்லி கொள்ள உம்மைவிட யாரும் இல்லை
    சொத்து என்று அள்ளி கொள்ள உம்மையன்றி  வேறு இல்லை  



    தெய்வீக குணமளிக்கும் இயேசு துறவுறசபை வழங்கும் குணமளிக்கும் ஆராதனை

    தெய்வீக குணமளிக்கும் இயேசு துறவுறசபை வழங்கும் குணமளிக்கும்  ஆராதனை

    நித்தியமான ஆயுள் காப்புறுதி

    பெரும்பாலான வேளைகளில் நாம் பல வகையான காப்புறுதித்திட்டங்கள் பற்றிக் கேள்விப் பட்டிருந்தாலும் அவை என்ன என்று,
    முக்கியமாக, அவை எதைப் பாதுகாக்கின்றன என்று, புரிந்துக்கொள்வது இல்லை. உண்மை என்னவெனில், இரு பிரதான வகை காப்புறுதிகள்உள்ளன. அவை, உங்களின் வாழ்க்கையில் வெவ்வேறு அம்சங்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும்

    1) ஆயுள் காப்புறுதி

    2) பொதுக் காப்புறுதி

     உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் ஏற்படும் பண நெருக்கடியைத்தீர்ப்பதில் ஆயுள் காப்புறுதி உதவும். நீங்கள் அகால மரணமடைந்தால்
    காப்புறுதிப் பணம் உங்கள் குடும்பத்தினருக்குத் தரப்படும். மற்றபடி நீங்கள் நிரந்தர அல்லது தற்காலிக செயலிழப்புக்கு ஆளானால் பாலிசிப்
    பணம் உங்களிடம் வழங்கப்படும்.

    நான் ஏன் ஆயுள் காப்புறுதியை வாங்க வேண்டும்?

    1) நீங்கள் மரணமடைந்த பின்னரும் உங்கள் குடும்பத்துக்கு வருமானம் கிடைக்க இது வகை செய்யும்.

    2) உங்கள் பிள்ளைகளின் கல்விச் செலவுகளுக்கு இது உதவும்
    ஓய்வுக்குப் பின்னரும் உங்களுக்கு நிலையான வருமானம் கிடைத்து வர இது நல்ல சேமிப்பு திட்டம்.

    4)கடுமையான நோய் அல்லது விபத்து காரணமாக உங்களுக்கு ஏற்படக்கூடிய வருமானக் குறைச்சலை நிவர்த்தி செய்யும்.

    என்ன கிறிஸ்தவ தளத்தில் காப்புறுதி யை பற்றி விளம்பரம் உள்ளது என்று யோசிகின்றிர்களா? காப்புறுதி யை பற்றி நமது அன்றாட வாழ்வில் அறிந்திருப்போம்.ஆனால் நாம் அறியாத ஒருவர் நாம் கேட்காமலே நம்மீது வைத்த ஆழமான காதலினால் தனது சொந்த இரத்தம் என்றும் பாராமல் உனக்காக தந்து உயிரையும் கொடுத்து உனக்கு வரும் சகல ஆபத்துகளையும் தானே ஏற்று சுமந்து தீர்த்தார்

    உலகம் முடியும் வரை நிலைத்து நிற்க  கூடிய  நிலையான ஆயுள் காப்புறுதியை அன்று இஸ்ரவேலில் உள்ள கால்வாரிமலையில் தனது சொந்த இரத்தத்தை கிரயமாக கொடுத்து செய்து முடித்தார் நமது பரம தக்கப்னான ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து  
    நிலையான ஆயுள் காப்புறுதியினால் நாம் பெறும் நன்மைகளாவன  
    நமக்கு பாவத்தில் இருந்து விடுதலை நோயில் இருந்து விடுதலை ஆயிரம் தலைமுறைக்கு தேவனின் இரக்கம் ஆபத்துகள் பயங்கரங்களில் இருந்து பாதுகாப்பு  உங்களது வலது புறமும் இடது புறமும் இரண்டு வானதூதரின் பாதுகாப்பு மொத்தத்தில் சகல ஆபத்துகள்  பயங்கரங்களில் இருந்து பாதுகாப்பு சகல கட்டுகளில் இருந்து விடுதலை      
    இதுவே நித்திய நித்தியமான ஆயுள்  காப்புறுதி  இதுவே கிறிஸ்தவர்களால் இரட்சிப்பு என அழைக்கபடுகின்றது. நாம் அனைவரும் இந்த நித்திய நித்தியமான ஆயுள்  காப்புறுதியை செய்ய தவறி விடுகின்றோம் 

    இந்த இரட்சிப்பை பெற நாம் என்ன செய்ய வேண்டும் ?
    ஜேசு மீது விசுவாசம் கொண்டு ஏற்றுக் கொண்டால் போதும். அவர் சகலதையும் பார்த்து  கொள்வார் அத்துடன் உங்களுக்கு அருகில் உள்ள கிறிஸ்த தேவாலயத்துக்கு செல்லுங்கள் அவர்கள் உங்களை   இரட்சிப்பை நோக்கி வழிநடத்துவார்கள்.

    மத்தேயு 6:20,21 

    19 ,“உங்களுக்காக இப்பூமியில் செல்வம் சேர்த்து வைக்காதீர்கள். பூச்சிகளாலும் துருவாலும் பூமியிலுள்ள செல்வம் அழியும். மேலும் திருடர்கள் உங்கள் வீட்டை உடைத்து உங்கள் செல்வங்களைக் கொள்ளையடித்துப் போவார்கள். 
    20 எனவே உங்கள் செல்வங்களைப் பரலோகத்தில் சேமியுங்கள். பூச்சிகளும் துருவும் அவற்றை அழிக்க இயலாது. பரலோகத்திலிருக்கும் செல்வத்தைத் திருடர்களும் திருட முடியாது. 
    21 உங்கள் செல்வம் எங்கேயோ அங்கே உங்கள் உள்ளமும் இருக்கும்.


    நன்றி படங்கள்  Catholic Pentecost Mission