Showing posts with label abrakam. Show all posts
Showing posts with label abrakam. Show all posts

எத்தனை தெய்வங்கள் இந்த உலகத்தில் ?

எத்தனை தெய்வங்கள் இந்த உலகத்தில் ஒரே ஒரு மெய்யான தெய்வம் இயேசு மட்டுமே

இஸ்ரேல் பிரச்சினை வரலாற்று சான்றுகளுடன் ஆவண காணொளி

இஸ்ரேல் பிரச்சினை வரலாற்று சான்றுகளுடன் ஆவண காணொளி 

10 வாதைகளும் 10 கற்பனைகளும்

    ஆதியாகமம்1 அதிகாரம்
    24. பின்பு தேவன்: பூமியானது ஜாதிஜாதியான ஜீவஜந்துக்களாகிய நாட்டுமிருகங்களையும், ஊரும் பிராணிகளையும், காட்டுமிருகங்களையும் ஜாதிஜாதியாகப் பிறப்பிக்கக்கடவது என்றார்; அது அப்படியே ஆயிற்று.

    25. தேவன் பூமியிலுள்ள ஜாதிஜாதியான காட்டுமிருகங்களையும், ஜாதிஜாதியான நாட்டுமிருகங்களையும், பூமியில் ஊரும் பிராணிகள் எல்லாவற்றையும் உண்டாக்கினார்; தேவன் அது நல்லது என்று கண்டார்.

    26. பின்பு தேவன்: நமது சாயலாகவும் நமது ரூபத்தின்படியேயும் மனுஷனை உண்டாக்குவோமாக; அவர்கள் சமுத்திரத்தின் மச்சங்களையும், ஆகாயத்துப் பறவைகளையும், மிருகஜீவன்களையும், பூமியனைத்தையும், பூமியின்மேல் ஊரும் சகலப் பிராணிகளையும் ஆளக்கடவர்கள் என்றார்.

    27. தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார், அவனைத் தேவசாயலாகவே சிருஷ்டித்தார்; ஆணும் பெண்ணுமாக அவர்களைச் சிருஷ்டித்தார்.
28. பின்பு தேவன் அவர்களை நோக்கி: நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்பி, அதைக் கீழ்ப்படுத்தி, சமுத்திரத்தின் மச்சங்களையும் ஆகாயத்துப் பறவைகளையும், பூமியின்மேல் நடமாடுகிற சகல ஜீவஜந்துக்களையும் ஆண்டுகொள்ளுங்கள் என்று சொல்லி, தேவன் அவர்களை ஆசீர்வதித்தார்.
தேவன் அனைத்து ஜீவன்களையும்  கீழ்ப்படுத்தி ஆண்டு ஆண்டுகொள்ளுங்கள் என்று  சொன்னார் ஆனால் பிசாசு மனிதனை படைப்புகள் அனைத்துக்கும் அடிமைபடுத்திவிடான்  
10 வாதைகளும் 10 கற்பனைகளும்

மறைக்கப்பட்ட தேவ ரகசியம் பாகம் 02

மறைக்கப்பட்ட தேவ ரகசியம் என்ற தலைப்பில் Bro Selvan Sumathi அவர்கள் கர்த்தருடைய வார்த்தையை நம்மோடு பகிர்ந்து கொள்ளும் வீடியோ காட்சியின் நான்கு பாகங்களில் இது பாகம் 2.

மறைக்கப்பட்ட தேவ ரகசியம் பாகம்01




மறைக்கப்பட்ட தேவ ரகசியம் என்ற தலைப்பில் Bro Selvan Sumathi அவர்கள் கர்த்தருடைய வார்த்தையை நம்மோடு பகிர்ந்து கொள்ளும் வீடியோ காட்சியின் நான்கு பாகங்களில் இது முதல் பாகம்.

தேவனே, நான் உமதண்டையில் - இன்னும் நெருங்கிச் சேர்வதே என் ஆவல் பூமியில்

தேவனே, நான் உமதண்டையில் - இன்னும் நெருங்கிச்
சேர்வதே என் ஆவல் பூமியில்.

மாவலிய கோரமாக வன் சிலுவை மீதினில் நான்

கோவே, தொங்க நேரிடினும்
ஆவலாய் உம்மண்டை சேர்வேன்

யாக்கோபைப்போல், போகும் பாதையில் - பொழுது பட்டு
இராவில் இருள் வந்து மூடிட

தூக்கத்தால் நான் சாய்ந்து தூங்கினாலும் என் கனாவில்

நோக்கியும்மை கிட்டிச் சேர்வேன், வாக்கடங்கா நல்ல நாதா!

பரத்துக்கேறும் படிகள் போலவே – என் பாதை தோன்றப்

பண்ணும் ஐயா, என்றன் தேவனே,
கிருபையாக நீர் எனக்குத் தருவதெல்லாம் உமதண்டை
அருமையாய் என்னையழைத்து அன்பின் தூதனாகச் செய்யும்

. நித்திரையினின்று விழித்துக் - காலை எழுந்து

கர்த்தாவே, நான் உம்மைப் போற்றுவேன்;

இத்தரையில் உந்தன் வீடாய் என்துயர்க் கல் நாட்டுவேனே,
என்றன் துன்பத்தின் வழியாய் இன்னும் உம்மைக் கிட்டிச் சேர்வேன்

. ஆனந்தமாம் செட்டை விரித்துப் - பரவசமாய்
ஆகாயத்தில் ஏறிப் போயினும்
வான மண்டலங் கடந்து பறந்து மேலே சென்றிடினும்
மகிழ்வுறு காலத்திலும் நான் மருவியும்மைக் கிட்டிச் சேர்வேன்.