Showing posts with label affected. Show all posts
Showing posts with label affected. Show all posts

தேவனே, நான் உமதண்டையில் - இன்னும் நெருங்கிச் சேர்வதே என் ஆவல் பூமியில்

தேவனே, நான் உமதண்டையில் - இன்னும் நெருங்கிச்
சேர்வதே என் ஆவல் பூமியில்.

மாவலிய கோரமாக வன் சிலுவை மீதினில் நான்

கோவே, தொங்க நேரிடினும்
ஆவலாய் உம்மண்டை சேர்வேன்

யாக்கோபைப்போல், போகும் பாதையில் - பொழுது பட்டு
இராவில் இருள் வந்து மூடிட

தூக்கத்தால் நான் சாய்ந்து தூங்கினாலும் என் கனாவில்

நோக்கியும்மை கிட்டிச் சேர்வேன், வாக்கடங்கா நல்ல நாதா!

பரத்துக்கேறும் படிகள் போலவே – என் பாதை தோன்றப்

பண்ணும் ஐயா, என்றன் தேவனே,
கிருபையாக நீர் எனக்குத் தருவதெல்லாம் உமதண்டை
அருமையாய் என்னையழைத்து அன்பின் தூதனாகச் செய்யும்

. நித்திரையினின்று விழித்துக் - காலை எழுந்து

கர்த்தாவே, நான் உம்மைப் போற்றுவேன்;

இத்தரையில் உந்தன் வீடாய் என்துயர்க் கல் நாட்டுவேனே,
என்றன் துன்பத்தின் வழியாய் இன்னும் உம்மைக் கிட்டிச் சேர்வேன்

. ஆனந்தமாம் செட்டை விரித்துப் - பரவசமாய்
ஆகாயத்தில் ஏறிப் போயினும்
வான மண்டலங் கடந்து பறந்து மேலே சென்றிடினும்
மகிழ்வுறு காலத்திலும் நான் மருவியும்மைக் கிட்டிச் சேர்வேன்.

உலகத்தின் பாவ சுமைகளை சுமந்த என் இயேசுவே

காயங்கள் காயங்கள் இயேசுவின் உடலில் 
உட்காயங்கள் வெளிகாயங்கள் இயேசுவின் உடலில் 
கசையடிகளும் பாய்ந்து ஓடும் இரத்தமும் இயேசுவின் உடலில் 
உலகத்தின் பாவ சுமைகளை சுமந்த என் இயேசுவே 
அன்பினால் வேதனை காண சுமை சுமந்த இயேசுவே

காதலின் பெயரால்பரிசுத்த குலைச்சல் உண்டாகும்

காதலின் பெயரால்பரிசுத்த குலைச்சல் உண்டாகும்

எங்களைக் கொன்றதற்காக உலகில் வாழ்ந்துகொண்டிருக்கிற மக்களை நியாயம் தீர்த்துத் தண்டிக்க எவ்வளவு காலம் ஆகும்?

உலகின் பல பாகங்களில் கிறீஸ்தவர்களுக்கு எதிரான வன்முறை அதிகரித்து வருகின்றது .வரும் நாட்களில் இது பல மடங்காக அதிகரிக்கும்  என பரிசுத்த வேதாகமம் முன்னுரைகின்றது . காண்க 

வெளிப்படுத்தின விசேஷம்  6


ஆட்டுக்குட்டியானவர் ஐந்தாவது முத்திரையையும் உடைத்தார். அப்பொழுது பலிபீடத்தின் கீழே தம் விசுவாசத்திற்காகவும், சாட்சி சொன்னதற்காகவும் கொல்லப்பட்டவர்களின் ஆன்மாக்களை நான் பார்த்தேன். 

10 அந்த ஆன்மாக்கள் உரத்த குரலில் சத்தமிட்டன. “பரிசுத்தமும் உண்மையும் உள்ள தேவனே! எங்களைக் கொன்றதற்காக உலகில் வாழ்ந்துகொண்டிருக்கிற மக்களை நியாயம் தீர்த்துத் தண்டிக்க எவ்வளவு காலம் ஆகும்?” என்றன. 

11 பிறகு ஒவ்வொரு ஆன்மாவுக்கும் வெள்ளை அங்கிகள் கொடுக்கப்பட்டன. பிறகு சிறிது நேரத்திற்குக் காத்திருக்கும்படி அவற்றிற்குச் சொல்லப்பட்டது. கொல்லப்படப்போகிற அவர்களைப்போன்ற கிறிஸ்துவின் சேவையிலுள்ள எல்லா சக ஊழியர்களும் உண்மையில் கொல்லப்படுவதுவரை அவை காத்திருக்க வேண்டும்.

மத்திய கிழக்கு நாடுகளின் ஆபத்துகள் 02 ???

மத்திய கிழக்கு நாடுகளின் ஆபத்துகள் தீர்கதரிசனம்  நிறைவேறும் காலம் மிக மிக அண்மையில் உள்ளது  மத்திய கிழக்கு நாடுகளிளில் வேலையின் நிமித்தம் வாழ்பவர்கள் எக்காரணம் கொண்டும் எவரும் தற்கொலை செய்துகொள்ள வேண்டாம் காரணம் அங்கு ஏற்படும்  ஆபத்துக்கள்  உங்கள் செபதினால் வெல்ல முடியும் 

மத்திய கிழக்கு நாடுகளின் ஆபத்துகள்

மத்திய கிழக்கு நாடுகளின் ஆபத்துகள் தீர்கதரிசனம்  நிறைவேறும் காலம் மிக மிக அண்மையில் உள்ளது  சமாதானதுக்காக வேண்டிகொள்ளுகள்